எமது ஜாமிஉஸ் ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயல் மஹல்லாவைச் சேர்ந்த மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் எம்.ஆர். முஹம்மது ஹிஸான் 2021ம் ஆண்டு நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் அதி சித்தியைப் (9) பெற்றமைக்காக வெள்ளிக்கிழமை (09/12/2022) ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து அம்மாணவனைக் கெளரவிக்கின்ற நிகழ்வு மிக விமரிசையாக மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயலில் நடைபெற்றது.



இதன் போது மாணவன் எம்.ஆர். முஹம்மது ஹிஸான் 2021ம் ஆண்டு நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் அதி சித்தி
(9A) பெற்றமைக்காக பள்ளிவாயல் நிருவாகத்தினால் மாணவனை பாராட்டி நினைவு சின்னம் மற்றும் பணப்பரிசில்கள், அன்பளிப்புகள் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

பள்ளிவாயலின் தலைவர் அல்ஹாஜ் எம்..எச்..எம் சியாம் தலைமையில் நடைபெற்ற இந்த கெளரவிப்பு நிகழ்வில் பள்ளி வாயல் செயலாளர் அஷ்ஷெய்க்
ஏ..எல்..எம். அமீன் நழீமி, பொருளாளர்
எம்..ஏ..எம்..சுஹைர். உப தலைவர் அல்ஹாஜ் எம்.ஏ.எஸ்.எம். வாயிஸ் சட்டத்தரணி ஏ.உவைஸ் உட்பட பள்ளிவாயல் நிர்வாக சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

புளியந்தீவு மஹல்லாவின் இரண்டாவது தடவையாக இப்பேறு கிடைக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
புகைப்படங்கள் : ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். நூர்தீன்.